தேவையானவை:
பாதாம் பருப்பு 1 கப்
வால்நட் 1/2 கப்
சர்க்கரை 1 1/4 கப்
பால் 1/4 கப்
வெண்ணெய் 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
ஆப்ப சோடா 1 சிட்டிகை
------
செய்முறை:
பாதாம் பருப்பையும் வால்நட்டையும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டி பாலுடன் சேர்த்து நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்த விழுது,சர்க்கரை,வெண்ணெய்,ஏலத்தூள்,ஆப்பசோடா எல்லாவற்றையும் சேர்த்து கலந்து அப்படியே அடுப்பில் வைத்து கிளறவேண்டும்.
15 நிமிடங்களில்வாணலியில் ஒட்டாமல் பூத்து வரும் போது அடுப்பை அணைத்து ரெடியாக உள்ள தட்டில் கொட்டவேண்டும்.
பின்னர் வேண்டிய வடிவத்தில் கட் பண்ணிக்கொள்ளலாம்.
-------------------------------------------------------------------------------------------------------
அனைவருக்கும் இனிய நல் தீபாவளி வாழ்த்துகள்
5 comments:
பாதாம் வால்நட் பர்ஃபி மிக அருமையாக எளிதாக இருக்கிறது.
தீபாவளி வாழ்த்துக்கள்.
@ கோமதி அரசு
வருகைக்கு நன்றி கோமதி அரசு தீபாவளி வாழ்த்துகள்
சத்தான இனிப்பு. எளிய செய்முறை.
வருகைக்கு நன்றி
ராமலக்ஷ்மி, தீபாவளி வாழ்த்துகள்
வருகைக்கு நன்றி
ராமலக்ஷ்மி, தீபாவளி வாழ்த்துகள்
Post a Comment