Monday, February 23, 2015

ஓட்ஸ் பொங்கல்






தேவையானவை:


ஓட்ஸ் 1 கப்

பயற்றம்பருப்பு 1/4 கப்
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி

மிளகு 10
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்

இஞ்சி 1 துண்டு

முந்திரிபருப்பு 10

நெய்  1 மேசைக்கரண்டி

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
நெய் 2 மேசைக்கரண்டி

கருவேப்பிலை ஒரு கொத்து

உப்பு தேவையானது
----------------------------

செய்முறை:


பயற்றம்பருப்பை அரை கப் தண்ணீர் மஞ்சள தூள் சேர்த்து குக்கரில் நன்றாக குழைய வேகவைக்கவேண்டும்.

ஒரு microwave bowl ல்  ஒரு கப் ஓட்ஸுடன் 1 1/2 கப் தண்ணீர் விட்டு "H" ல் ஐந்து நிமிடம் வைத்தால் ஓட்ஸ் நன்றாக வெந்துவிடும்

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வேகவைத்த பயற்றம்பருப்பு,வெந்த ஓட்ஸ்  தேவையான உப்பு மூன்றையும் சேர்த்து கிளறவேண்டும்.


 அதனுடன் மிளகு,சீரகம் இரண்டையும் ஒன்று இரண்டுமாக mixy ல் பொடிபண்ணி சிறிது நெய்யில் பொரித்து சேர்க்கவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி போடவும்.

பெருங்காயத்தூள்,கருவேப்பிலை இரண்டையும் நெய்யில் பொரித்து போடவும்.முந்திரிப்பருப்பை நெய்யில் பொரித்துப்போடவும்.

கடைசியில் மீதமுள்ள நெய்யை உருக்கி ஊற்றி நன்றாக கிளறி இறக்கவும்.

நார்சத்து மிகுந்த,சத்து நிறைந்த உணவு இது.

Tuesday, February 17, 2015

எள்ளு முறுக்கு





தேவையானவை:

பச்சரிசி மாவு 1 கப்
பொட்டுக்கடலை மாவு 1/4 கப்
கடலை மாவு 1/4 கப்
எள் 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:


வாணலியில் அரை கப் தண்ணீர் விட்டு அதனுடன் மிளகாய் தூள்,பெருங்காய்த்தூள்,தேவையான உப்பு சேர்த்து  நன்கு கொதிக்கவைக்கவும்.
பின்னர் அதனுடன் கடலை மாவு,பொட்டுக்கடலை மாவு,எள் சேர்த்து கிளறவும்.கிளறிய மாவு முறுக்கு மாவு பதத்தில் இருக்கவேண்டும்.
வேண்டுமென்றால் தண்ணீர் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம்.

வாணலியில் எண்ணைய் வைத்து காய்ந்த பின் தேன்குழல் படியில் முறுக்கு வில்லையைப்போட்டு,சிறிது மாவை அதில் சேர்த்து எண்ணையில் பிழியவும்.
இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.

Monday, February 9, 2015

ஆரஞ்சு தோல் துவையல்



தேவையானவை:

ஆரஞ்சு தோல் 1 கப் (நறுக்கியது)
மிளகாய் வற்றல் 4
உளுத்தம்பருப்பு 1 மேசைக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
புளி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
------

செய்முறை:


வாணலியில் சிறிது எண்ணெய் வைத்து பொடியாக நறுக்கிய ஆரஞ்சு தோலை நன்றாக வதக்கவேண்டும்.
மிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு,பெருங்காயம்,புளி நான்கையும் எண்ணெயில் வறுக்கவேண்டும்.
வறுத்ததை வதக்கிய ஆரஞ்சு தோலுடன் தேவையான உப்பு சேர்த்து அரைக்கவேண்டும்.
கடைசியில் தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவேண்டும்.

இந்த துவையலை சாதத்தோடு நல்லெண்ணைய் சேர்த்து சாப்பிடலாம்.

Sunday, February 1, 2015

சீரகம்-மிளகு-பூண்டு ரசம்



தேவையானவை:

தக்காளி 2
பூண்டு 10 பல்
புளி எலுமிச்சை அளவு
பெருங்காயம் 1 துண்டு
உப்புஎண்ணெய் தேவையானது
கொத்தமல்லித்தழை  சிறிதளவு
------
அரைக்க:
மிளகாய் வற்றல் 3
தனியா 1 தேக்கரண்டி
மிளகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
துவரம்பருப்பு 1 தேக்கரண்டி
------
தாளிக்க:
கடுகு
மிளகாய் வற்றல் 1
கறிவேப்பிலை சிறிதளவு
நெய் 1 மேசைக்கரண்டி
-------
செய்முறை:

அரைக்கக்கொடுத்துள்ளவைகளை தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைத்து விழுது போல அரைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

வாணலியில் எண்ணெய் வைத்து பொடியாக நறுக்கிய தக்காளி,பூண்டு இரண்டையும் நன்றாக வதக்கவேண்டும்.
அதனுடன் புளித்தண்ணீர், இரண்டு கப்தேவையான உப்பு,பெருங்காயம் சேர்த்து நன்றாக கொதிக்கவைக்கவேண்டும்.
அரைத்து வைத்துள்ள விழுதுடன் சிறிது தண்ணீர்  சேர்த்து அதனுடன் கலந்து  சிறிது நேரம்  கொதிக்க வைத்து நுரைத்து வந்தவுடன் அடுப்பை அணைக்க வேண்டும்.

நெய்யில் கடுகு,கிள்ளிய மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை தாளிக்கவேண்டும்.
கடைசியில் கொத்தமல்லித்தழையை தூவவேண்டும்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...