Wednesday, October 1, 2008

புட்டு

தேவையானவை:

புழுங்கலரிசி ரவை 1 கப்
வெல்லம் (பொடித்தது) 1 1/2 கப்
நெய் 1/4கப்
துவரம்பருப்பு 2 டீஸ்பூன்
தண்ணீர் 3/4 கப்
தேங்காய் துறுவல் 2 டீஸ்பூன்
ஏலக்காய் 2
முந்திரிபருப்பு 5
உப்பு ஒரு சிட்டிகை

செய்முறை:

புழுங்கலரிசியை mixyல் ரவையாக உடைத்துக்கொண்டு மாவில்லாமல் சலித்துக்கொள்ளவும்.
ஒருவாணலியை எடுத்துக்கொண்டு ரவையை எண்ணைய் விடாமல் சிவக்க வறுத்துக்கொள்ளவும்
துவரம்பருப்பை சிறிது நீரில் அரைமணிநேரம் ஊறவைக்கவும்.

முக்கால் கப் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பை கரைத்து அந்த தண்ணீரை ரவையில் விட்டு பிசிறிக்கொள்ளவும்.அதன் மீது ஊறவைத்த
துவரம்பருப்பையும் போட்டு குக்கரில் இட்லி தட்டில் பரப்பி 15 நிமிடம் வேகவைக்கவும்.(நடுவில் திறந்து பார்த்து வேகவில்லையென்றால் சிறிது தண்ணீர் தெளித்து வைக்கவும்)
நன்கு வெந்தவுடன் ஒரு பெரிய தட்டில் கொட்டி உதிர்த்துக்கொள்ளவும்.
வெல்லத்தை ஒரு கரண்டி தண்ணரில் கரைய விட்டு மண்ணில்லாமல் வடிகட்டவேண்டும்.
பிறகு வெல்லத்துடன் ஏலக்காய்,தேங்காய் துறுவல் சேர்த்து நல்லகெட்டி பாகாய் (ஒரு தட்டில் ஒரு சொட்டு விட்டால் முத்தாக வரும்)வந்தவுடன் வெந்த ரவையைக்கொட்டி
நன்றாக கிளறி வறுத்த முந்திரி,நெய் இவற்றை விட்டு இறக்கவும்.அடுப்பிலிருந்து இறக்கினவுடன் சற்று இளகினாற்போலத்தான் இருக்கும்.அரைமணி கழித்து பாகு உள்ளே
இழுத்துக்கொண்டு நன்றாக உதிரியாக வந்துவிடும்.
பச்சரிசி ரவையில் கூட புட்டு செய்யலாம்.
நவராத்திரிக்கு சுண்டலுக்கு பதில் புட்டு ஒருநாள் செய்யும் வழக்கம் உண்டு

2 comments:

Muruganandan M.K. said...

மிக அவதானத்துடன் ஒவ்வொரு ஸ்டெப்பாக எழுதியிருந்தீர்கள். புதிதாக செய்பவர்களுக்கு நிச்சம் உதவும்.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி டாக்டர்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...