Sunday, January 24, 2010

வளரும் குழந்தைகளுக்கு.... சத்துள்ள கஞ்சி

1.ஓமக்கஞ்சி

தேவையானவை:

புழுங்கலரிசி நொய் 1/2 கப்
மோர் 1 கப்
ஓமம் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு தேவையானது

செய்முறை:

புழுங்கலரிசி நொய்யை சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
ஓமத்தை பொடி பண்ணி தனியாக சிறிது தண்ணீரில் கொதிக்கவைக்கவும்.
வடிகட்டி தனியே எடுத்துவைக்கவும்.
வடிகட்டிய ஓமத்தண்ணீரை வெந்த புழுங்கலரிசி நொய்யில் கலக்கவும்.
சிறிது ஆறினவுடன் உப்பு,மோர் கலந்து குடிக்கலாம்.
--
வயிறு உப்புசம் போகும்.
----------------------
2.நவதானிய கஞ்சி

தேவையானவை:

புழுங்கலரிசி 2 கப்

சோளம்,கோதுமை,கடலைபருப்பு,பச்சைபயறு,கறுப்பு உளுந்து,கேழ்வரகு,
பொட்டுக்கடலை,வேர்கடலை ஒவ்வொன்றும் ஒரு டேபிள்ஸ்பூன்.
-----
முந்திரிபருப்பு 4
பாதாம் பருப்பு 4
பிஸ்தா பருப்பு 4
சாரப்பருப்பு 4
ஏலக்காய் 2
சுக்கு ஒரு சிறிய துண்டு
செய்முறை:

மேலே கூறிய எல்லாப்பொருட்களையும் வெய்யிலில் நல்ல காயவைத்து மாவாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு கப் தண்ணீரில் ஒரு டேபிள்ஸ்பூன் கஞ்சி மாவை சேர்த்து அடுப்பில் வைத்து கிளறி
பால் சிறிது விட்டு குழந்தைகளுக்குக்கொடுக்கலாம்.
சுவையாக இருக்கும்..

4 comments:

சிநேகிதன் அக்பர் said...

குழந்தைகளுக்கு தேவையானதுதான்.

பகிர்வுக்கு நன்றி

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Akbar

Vijiskitchencreations said...

நல்ல ஹெல்தி ரெசிப்பி.

.

http://www.vijisvegkitchen.blogspot.com/

இங்கு வந்து உங்க கருத்தையும் சொல்லுங்க.

Vijiskitchencreations said...

நல்ல ஹெல்தி ரெசிப்பி.

.

http://www.vijisvegkitchen.blogspot.com/

இங்கு வந்து உங்க கருத்தையும் சொல்லுங்க.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...