Monday, September 1, 2008

மசாலா தட்டை

தேவையானவை:

மைதாமாவு 2 கப்
அரிசிமாவு 1 கப்
வெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணெய் தேவையானது

அரைக்க:

பூண்டு 6 பல்
பச்சைமிளகாய் 4
இஞ்சி 1 துண்டு

செய்முறை:

மைதாமாவை சலித்து ஒரு துணியில் மூட்டை போல கட்டி இட்லி தட்டில் ஆவியில் வைத்து எடுக்கவும்.
பின்னர் நன்றாக உதிர்க்கவும்.அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதுபோல அரைத்து வைக்கவும்.

உதிர்த்த மைதாமாவுடன் அரிசிமாவு,அரைத்த விழுது,வெண்ணய்,உப்பு தேவையான தண்ணீர் சேர்த்து
நன்றாக பிசையவும்.ஒரு plastic paper ல் பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து ஒவ்வொரு உருண்டையையும்
தட்டைகளாக தட்டி எண்ணையில் பொரித்து எடுக்கவும்

2 comments:

Anonymous said...

மிகவும் இலகுவான செய்முறையாக உள்ளதே :)

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி தூயா

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...