Sunday, February 20, 2011

வெஜ் பிரிஞ்சி



தேவையானவை:

பாசுமதி அரிசி 2 கப்

பீன்ஸ் 10

காரட் 2

உருளைக்கிழங்கு 2

பட்டாணி 1/2 கப்

பச்சைமிளகாய் 2

தேங்காய்பால் 1 1/2 கப்

நெய் 1 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானவை

-------

அரைக்க:

சோம்பு 1 டீஸ்பூன்

கசகசா 1/2 டீஸ்பூன்

முந்திரிபருப்பு 10

பூண்டு 4 பல்

-----

தாளிக்க:

பட்டை 1 துண்டு

லவங்கம் 2

------

செய்முறை:

பாசுமதி அரிசியை 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.தண்ணீர் நன்றாக வடிந்ததும் நெய்யில் அரிசியை

5 நிமிடம் வறுக்கவேண்டும்.

பீன்ஸ்,காரட் இரண்டையும் பொடியாக நறுக்கவும்.

உருளைக்கிழங்கை தோலுரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பச்சை மிளகாயை குறுக்கே வெட்டிக்கொள்ளவும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைக்கவும்.

----

கடாயில் எண்ணைய் வைத்து பட்டை,லவங்கம் தாளித்து பொடியாக நறுக்கிய பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு,

பட்டாணி,பச்சைமிளகாய் எல்லாவற்றையும் வதக்கவேண்டும்.அரைத்த விழுது,உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

வறுத்த பாசுமதி அரிசியுடன் தேங்காய்பால் 1 1/2 கப்.தண்ணீர் 1 1/2 கப் வதக்கிய காய்கறி கலவை எல்லாவற்றையும் நன்றாக கலந்து ele.cookerல்

வைக்கவேண்டும்.

onionரெய்தா,குருமா இரண்டும் இதற்கு ஏற்றது.

10 comments:

Priya Sreeram said...

looks lovely-the rice is restaurant style served !

Kanchana Radhakrishnan said...

Thank you for the comment Priya Sreeram.

Asiya Omar said...

arumai kanchana.

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி asiya omar

Jaleela Kamal said...

ரொம்ப நல்ல இருக்கு

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Jaleela

Krishnaveni said...

sometimes i do like this without coconut, your's looks super yummy

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Krishnaveni.

மதுரை சரவணன் said...

செஞ்சு சாப்பிட்டாப் போச்சு.. வாழ்த்துக்கள்

Kanchana Radhakrishnan said...

வருகைக்கு நன்றி மதுரை சரவணன்.

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...