தேவையானவை:
ரவா 1 கப்
மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
---
பயத்தம்பருப்பு 1/4 கப்
இஞ்சி ஒரு சிறிய துண்டு
பச்சைமிளகாய் 2
மிளகு 1 டேபிள்ஸ்பூன்
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
நெய் 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
முந்திரிபருப்பு 10
உப்பு,எண்ணைய் தேவையானது
---
செய்முறை:
பயத்தம்பருப்பை ஒரு கப் தண்ணீரில் மஞ்சள்தூள்,பெருங்காய்த்தூள் சேர்த்து வேகவைக்கவேண்டும். பருப்பு நன்கு குழைய வேண்டும்.குக்கரிலும் வைக்கலாம். 4 விசில் விடவேண்டும்.
ஒரு கடாயை எடுத்துக்கொண்டு ஒரு டேபிள்ஸ்பூன் நெய்,ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணைய் விட்டு முதலில் மிளகை பொறிக்கவேண்டும். பின்னர் சீரகத்தை பொறித்து அதனுடன் பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும்.தயாராக உள்ள பயத்தம்பருப்பை இதனுடன் சேர்த்து கிளறவேண்டும்.
இன்னொரு அடுப்பில் இரண்டு கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் கொதிக்கவிடவேண்டும். தண்ணீர் கொதித்தவுடன் பயத்தம்பருப்பு கலவையுடன் உப்புடன் சேர்த்து கிளறவேண்டும்.
ரவையை பரவலாக கட்டித் தட்டாமல் தூவிக்கொண்டே கிளறவேண்டும்,பயத்தம்பருப்பும் ரவையும் நன்றாக சேர்ந்து வந்தபின் அடுப்பை அணைத்து வறுத்த முந்திரியை போடவேண்டும்.
ரவா பொங்கலுக்கு பொருத்தமான side dish தேங்காய் சட்னி.