Friday, October 30, 2009

கத்திரிக்காய் கொத்சு


தேவையானவை:

பெரிய கத்திரிக்காய் 1
புளி எலுமிச்சை அளவு
உப்பு,எண்ணைய் தேவையானது
---
அரைக்க:

மிளகாய்வற்றல் 10
உளுத்தம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு
----
தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
----
செய்முறை:

பெரிய கத்திரிக்காயின் மேல் கொஞ்சம் எண்ணைய் தடவி அடுப்பில் சுட வேண்டும்.
பின்னர் தோலுரித்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக்கொள்ளவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணையில் வறுத்து சிறிது தண்ணீர் விட்டு
விழுது போல் அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து சிறிது உப்புடன் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
புளி நன்றாகக் கொதித்தவுடன் அரைத்த விழுதினை சேர்க்கவேண்டும்.
நன்கு கொதித்தவுடன் கத்திரிக்காய் விழுதினை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவைக்கவேண்டும்.
மிகக் காரமாக உணர்ந்தால் சிறிது வெல்லம் சேர்க்கலாம்.
வெண்பொங்கல்,அரிசி உப்புமா இரண்டிற்கும் ஏற்ற side dish இது.

Thursday, October 29, 2009

பச்சைமிளகாய் சட்னி

தேவையானவை:

பச்சைமிளகாய் 10
புளி எலுமிச்சை அளவு
பெருங்காயம் 1 துண்டு
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கறிவேப்பிலை சிறிதளவு
வெல்லம் ஒரு டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பச்சைமிளகாயை எண்ணைய் விட்டு வதக்கிகொள்ளவும்.
பெருங்காயம்,உப்பு இரண்டையும் சிறிது எண்ணைய் விட்டு வறுத்துக்கொள்ளவேண்டும்.
புளியிலிருந்து கோதை எடுத்துவிட்டு லேசாக வறுக்கவேண்டும்.
பச்சைமிளகாய்,உப்பு,பெருங்காயம்,புளி நான்கையும் சிறிது தண்ணீர் விட்டு விழுது போல் அரைக்கவேண்டும்.


வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை
சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.

நன்றாக கொதித்தவுடன் இறக்கவேண்டும்.
வேண்டுபவர்கள் வெல்லத்தை சேர்க்கலாம்.

தோசை,இட்லி இவற்றிற்கு தொட்டுக்கொள்ளலாம்.

Wednesday, October 28, 2009

முட்டைகோஸ் கறி


தேவையானவை:

முட்டைக்கோஸ் 1
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

அரைக்க:

தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
வற்றல் மிளகாய் 2
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை:

முட்டைக்கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும்.
ஒருபாத்திரத்தில் சிறிது தண்ணீர் வைத்து மஞ்சள்தூள்,முட்டைக்கோஸ் சேர்த்து கொதிக்கவைக்கவும்.
பாதி வெந்ததும் உப்பு போடவும்.
நன்றாக வெந்ததும் வடிகட்டவேண்டும்.

வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வடிகட்டிய முட்டைக்கோஸை
வதக்கவும். அரைத்து வைத்துள்ளதை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவும்.

Microwave ல் செய்வதென்றால்

Microwave பாத்திரத்தில் சிறிது தண்ணீர் விட்டு மஞ்சள் தூள்,முட்டைகோஸ் சேர்த்து 5 நிமிடம் "High" ல் வைக்கவேண்டும்,
மீண்டும் எடுத்து ஒரு கிளறு கிளறி உப்பு சேர்த்து 5 நிமிடம் "High" ல் வைக்கவேண்டும்.
இதில் தண்ணீர் அதிகம் வைக்கவேண்டாம்.தெளித்தாலே போதும்.
வடிகட்டி மேற்கூறியவாறு செய்யவேண்டும்.

Sunday, October 25, 2009

ஹைதராபாத் வெஜ் பிரியாணி



தேவையானவை
பாசுமதி அரிசி 2 கப்
பீன்ஸ் 15
காரட் 2
உருளைக்கிழங்கு 2
வெங்காயம் 2
தக்காளி 3
எண்ணைய்,உப்பு தேவையானது.
---
இஞ்சிபூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
தனியாதூள் 1 டேபிள்ஸ்பூன்
காரப்பொடி 2 டேபிள்ஸ்பூன்
தயிர் 1/4 கப்
-----
தாளிக்க:
கிராம்பு 4
ஏலக்காய் 2
சோம்பு 1 டேபிள்ஸ்பூன்
பட்டை 1 துண்டு
பிரிஞ்சி இலை 1
கசகசா 1 டேபிள்ஸ்பூன்
-----

செய்முறை:

* பாசுமதி அரிசியை நன்றாகக் களைந்து ஒரு கப்புக்கு 1 1/2 கப் தண்ணீர் கணக்கில் வைத்து 45 நிமிடம் ஊறவைக்கவும்.
*பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு,வெங்காயம் நான்கையும் பொடியாக நறுக்கவும்.
*தக்காளியை பொடியாக நறுக்கி எண்ணைய் விட்டு பேஸ்டு போல் செய்துகொள்ளவும்.
---
1.வாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்க கொடுத்துள்ள மசாலா சாமான்களை தாளிக்கவும்.
2.அதனுடன் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
3.பின்னர்
நறுக்கிவைத்துள்ள காய்கறிகள்
தக்காளி பேஸ்டு
இஞ்சி பூண்டு விழுது
மஞ்சள்தூள்,தனியா தூள்,காரப்பொடி
தேவையான உப்பு
எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
4.காய்கறிகள் முக்கால் வெந்தவுடன் தயிர் விட்டு கலந்து அடுப்பை அணைக்கவும்.
5.ஊறவைத்த அரிசியில் காய்கறிக்கலவையைக் கலந்து ஒரு அடி கனமான பாத்திரத்தில் வைத்து அடுப்பில் வைக்கவேண்டும்.
அரிசியும் காய்கறிக்கலவையும் சம சீராக (தண்ணீர் அதிகம் கூடாது) இருக்கவேண்டும்.
6.பாத்திரத்தை அடுப்பில் வைத்து முதல் 10 நிமிடம் medium high லும் அடுத்த 10 நிமிடம் medium low விலும்
வைக்கவேண்டும்.

தம் கட்டுதல்:
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து ஒரு அகண்ட பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதற்குள் பிரியாணி பாத்திரத்தை
10 நிமிடம் வைக்கவேண்டும்.இப்படி செய்தால் பிரியாணி பொல பொல என்று உதிரியாக இருக்கும்.

வெள்ளரிக்காய் ரெய்தா:
வெள்ளரிக்காய் 2; புதினா சிறிதளவு; பச்சைமிளகாய் 4; உப்பு ; தயிர் 1 கப்

வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.தயிர் சேர்க்கவும்.
புதினா,பச்சைமிளகாய்,உப்பு மூன்றையும் பச்சையாக அரைத்து தயிரில் கலக்கவும்.








:

Friday, October 23, 2009

பயத்தம்பருப்பு தோசை


தேவையானவை:

புழுங்கலரிசி 2 கப்
பயத்தம்பருப்பு 1 கப்
வெந்தயம் 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 4
இஞ்சி 1 துண்டு
உப்பு,எண்ணைய் தேவையானது
கொத்தமல்லித்தழை சிறிதளவு

செய்முறை:

புழுங்கலரிசி,பயத்தம்பருப்பு,வெந்தயம் மூன்றையும் நான்கு மணிநேரம் ஊறவைக்கவும்.
பின்னர் வடிகட்டி தேவையான உப்புடன் நைசாக அரைக்கவும்.
அரைத்த மாவில் பச்சைமிளகாயையும்,இஞ்சியையும் பொடியாக நறுக்கிப்போடவும்.
கொத்தமல்லித்தழையை நன்கு அரிந்து பொடியாக நறுக்கிப் போடவும்.

அடுப்பில் தோசைக்கல் சூடானவுடன் மாவை ஊற்றி எண்ணைய் சிறிது விட்டு
இரு பக்கமும் வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.

இதற்கு side dish வெங்காயச் சட்னி.

Wednesday, October 21, 2009

கேழ்வரகு புட்டு(நூறாவது பதிவு )


தேவையானவை:

கேழ்வரகு மாவு 1 கப்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
சர்க்கரை 1 டேபிள்ஸ்பூன்
உப்பு 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் 1 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் தேவையானது
ஏலக்காய் 4

செய்முறை:

* கேழ்வரகு மாவையும் உப்பையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக
தண்ணீர் தெளித்து பிசைய வேண்டும்.உதிரியாக இருக்கவேண்டும்.
இந்த கலவையை இட்லி குக்கரில் ஆவியில் 15 நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.

* குக்கரில் இருந்து எடுத்து ஒரு அகண்ட தட்டில் பரவலாகப் போட்டு அதில்
பொடித்த சர்க்கரை,நெய்,தேங்காய் துருவல்,ஏலக்காய் (ஏலக்காயை நெய்யில் வறுத்து போடவும்)
சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.

Monday, October 19, 2009

டோக்ளா (குஜராத்)


தேவையானவை:

புழுங்கலரிசி 1கப்
உளுத்தம்பருப்பு 1 கப்
பயத்தம்பருப்பு 1 கப்
----
தயிர் 3 கப்
பச்சைமிளகாய் 4
இஞ்சி ஒரு துண்டு
சமையல் சோடா 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை சிறிது
உப்பு ,எண்ணைய் தேவையானது
---
செய்முறை:

1.அரிசி,உளுத்தம்பருப்பு,பயத்தம்பருப்பு மூன்றையும் ஒரு மணிநேரம் ஊறவைத்து நிழலில் காயவைக்கவும்.
ரவை பதத்துக்கு உடைத்துக்கொள்ளவும்.

2.உடைத்த ரவையுடன் தயிர்,உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.
நான்கு மணிநேரம் கழித்து சமையல் சோடாவை சிறிது எண்ணையில் கலந்து சேர்க்கவும்.
3.பச்சைமிளகாய்,இஞ்சி இரண்டையும் நைசாக அரைத்து சேர்க்கவும்.

4.ஒரு வாணலியில் சிறிது தண்ணீர் வைத்து அதில் ஒரு தட்டில் சிறிது எண்ணைய் தடவி மாவை ஊற்றி
மூடவும்.15 நிமிடம் கழித்து எடுத்து வில்லைகள் போட்டு அரிந்த கொத்தமல்லித்தழையால் அலங்கரிக்கவும்.
(இட்லி குக்கரிலும் வைக்கலாம்.)

5.இதற்கு சரியான side dish புதினா அல்லது தக்காளி சட்னி.

(சற்று காரம் வேண்டுபவர்கள் மிளகுத்தூளை சிறிது மேலே தூவிக்கொள்ளலாம்.)

Thursday, October 15, 2009

தீபாவளி லேகியம்


தேவையானவை:

மிளகு 2 டீஸ்பூன்
சீரகம் 2 டீஸ்பூன்
தனியா 2 டீஸ்பூன்
ஓமம் 3 டேபிள்ஸ்பூன்
கண்டதிப்பிலி 10 குச்சிகல்
ஜாதிக்காய் 1 (சிறியது)
சுக்கு 25 கிராம்
ஏலக்காய் 3
நெய் 1/4 கப்
பொடித்த வெல்லம் 1/2 கப்
தேன் 1/4 கப்

செய்முறை:

மேலே கூறியவற்றில் நெய்,தேன் இரண்டையும் தவிர்த்து மற்ற எல்லாப்பொருட்களையும் மிக்ஸியில்
உடைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் எல்லா பொருட்களையும் போட்டு 15 நிமிடம்
ஊறவைக்கவும்.
சிறிது தண்ணீருடன் விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அரைத்த விழுதை கிளறவும்.
கட்டிதட்டாமல் இருக்க விடாமல் கிளறவேண்டும்.
தண்ணீர் வற்றியவுடன் பொடித்த வெல்லத்தைப் போடவேண்டும்.
பின்னர் நெய்யை விட்டு நன்கு கிளறவேண்டும்.
நெய் தனியாக பிரிந்ததும் தேனை விட்டு கிளறி எடுத்து வைக்கவேண்டும்.

Wednesday, October 14, 2009

மைக்ரோவேவ் மைசூர் பாக்


தேவையானவை:

கடலைமாவு 1 கப்
பொடித்த சர்க்கரை 1 1/2 கப்
நெய் 1 கப்
பால் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

கடலை மாவு,பொடித்த சர்க்கரை,நெய் மூன்றையும் மைக்ரோவேவ் பாத்திரத்தில் நன்கு கலந்து கீழ்கண்டவாறு வைக்கவும்.

மைக்ரோவேவ் "High" ல் 2 1/2 நிமிடம் வைக்கவேண்டும்.
முதலில் 30 செகண்டு வைத்துவிட்டு எடுத்து கிளறி மீண்டும் 30 செகண்டு வைத்து கிளறி
மீண்டும் இது மாதிரி மொத்தம் 5 தடவை செய்யவேண்டும்.(அதாவது 2 1/2 நிமிடம்).
----
பின்னர் பாலை விட்டு கலந்து
"High" ல் மீண்டும் 2 1/2 நிமிடம் மேற்கூறியவாறு 30 செகண்டுக்கு ஒரு தடவை எடுத்து கிளறி
வைக்கவேண்டும். (5 தடவை).
பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்.
ஒரு தட்டில் நெய் தடவி மைசூர் பாக் கலவையை கொட்டி வேண்டிய வடிவத்தில்
கட் பண்ணிக்கொள்ளவும்.

Monday, October 12, 2009

குலாப் ஜாமுன்


தேவையானவை:

கோவா (sugarless) 2 கப்
சர்க்கரை 5 கப்
மைதாமாவு 1/2 கப்
நெய் 1 1/2 கப்
சோடா உப்பு 1/2 டீஸ்பூன்
குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்
பச்சைகற்பூரம் 1/2 டீஸ்பூன்
தண்ணீர் 6 கப்

செய்முறை:
1.கோவாவை முதலில் ஒரு தட்டில் கொட்டி பிசையவும்.பின்னர் அதில்
மைதாமாவையும்,சோடா உப்பையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து மூடி வைக்கவும்.
அரை மணிநேரம் கழித்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.

2.ஒரு அகண்ட கனமான பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் விட்டு,தண்ணீர் கொதித்தவுடன்
சர்க்கரையை சேர்க்கவும்.பாகு பதம் (இரண்டு விரலால் பாகைத் தொட்டுப் பார்த்தால்
'பிசுக்' என்று ஒட்டிக்கொள்ளும்.) வந்தவுடன் பச்சைக் கற்பூரத்தை சேர்த்து
பாகை வடிகட்டவும்.
வடிகட்டிய பாகில் குங்குமப்பூவை ஒரு டீஸ்பூன் சூடான பாலில் கரைத்து சேர்க்கவும்.
.
3.வாண்லியில் நெய்யை விட்டு அடுப்பை slim ல் வைத்து நெய் காய்ந்தபின் உருட்டி வைத்துள்ள
குலாப் ஜாமுனை கொஞ்சம் கொஞ்சமாகப்போட்டு,சற்று வெந்த பின் மெல்லிய குச்சியால்
ஒவ்வொன்றாகமெதுவாகத் திருப்பி விடவேண்டும்.
brown கலராக வந்தபின் இரண்டு நிமீடம் வைத்து நெய் வடிந்த பின் செய்து வைத்துள்ள பாகில் போடவும்.
அரை மணி கழித்து ஜீராவுடன் எடுத்து சாப்பிடலாம்.
(நெய் 1 1/2 கப் அதிகம் தான்.வாணலியின் அடியில் குலாப்ஜாமுன் படாமல்
இருப்பதற்காகவே நெய் சற்று கூடுதலாக வைக்கவேண்டும்)

Tuesday, October 6, 2009

ரவா உப்புமா


தேவையானவை:

ரவை 1 கப்
பெரிய வெங்காயம் 1
பட்டாணி 1/2 கப்
காரட் 2
பச்சைமிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
நெய் 2 டேபிள்ஸ்பூன்
எண்ணைய்,உப்பு தேவையானது

தாளிக்க:
கடுகு 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து

செய்முறை:

1.ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ரவையை நன்றாக
பொன்னிறமாக வறுக்கவும்.தனியே எடுத்து வைக்கவும்.
2.வெங்காயத்தையும் காரட்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
3.பச்சைமிளகாயை நீட்ட வாக்கில் கீறிக்கொள்ளவும்.
----
1.வாணலியில் எண்ணய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை
பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் பச்சைமிளகாய்,இஞ்சி சேர்த்து வதக்கவும்.
2.பின்னர் காரட்,பட்டாணி இரண்டையும் சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
காய்கறிக் கலவையை தனியே எடுத்து வைக்கவும்.
---
1.ஒரு அகண்ட அடி கனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும்.
சிறிது உப்பு சேர்க்கவும்.தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் வறுத்த ரவையை தூவிக்கொண்டே கிளறவும்.
கட்டி தட்டாமல் வந்தவுடன் காய்கறிக் கலவையை சேர்த்து கிளறவும்.
மீதியுள்ள ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யை ஊத்தவும்.
ரவை உப்புமா உதிரியாக நன்றாக வரும்.

Thursday, October 1, 2009

ஆப்பிள் பகோடா


தேவையானவை:

ஆப்பிள் 1
கடலைமாவு 1/2 கப்
அரிசி மாவு 1/4 கப்
உப்பு கொஞ்சம்
எண்ணைய் தேவையானவை



செய்முறை:
ஆப்பிளை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.
துருவிய ஆப்பிள்,கடலைமாவு,அரிசிமாவு,உப்பு நான்கையும் ஒன்றாக கலந்து பிசைந்து கொள்ளவும்.
தண்ணீர் வேண்டாம்.ஆப்பிளில் இருக்கும் ஈரத்தன்மையே போதுமானது.
கடாயில் எண்ணைய் வைத்து பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு பகோடாக்களாக
போட்டு பொன்னிறமாக வ்ந்ததும் எடுக்கவும்.
இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சிற்றுண்டி

36 எரிசேரி

 தேவையானவை: சேனைக்கிழங்கு  1 கப் நறுக்கிய  துண்டுகள் மஞ்சள் தூள் 1 டீஸ்பூன் மிளகு தூள் 1 டீஸ்பூன் உப்பு,எண்ணெய் தேவையானது ———- அரைக்க: மிளகா...